நாகை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டுள்ளது. மேலும், திருப்பலிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது. மேலும், இந்நோய் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பள்ளி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு, மக்கள் அதிகளவில், ஒரு இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க கேளிக்கை நிகழ்ச்சிகள், மாநாடு, கருத்தரங்கம், சுற்றுலா தளங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.