கொல்கத்தாவில் பாஜ நிர்வாகி நாராயண் சட்டர்ஜி என்பவர் தனது வீட்டருகே மாட்டு கொட்டகை முன்பாக, அவ்வழியாக வருவோர், செல்வோருக்கு கோமியம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். கொரோனா பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையின் கீழ் பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.