திமுக இளைஞரணி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவொற்றியூர்: திமுக சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி வட பெரும்பாக்கத்தில்  நடைபெற்றது.  கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மணலி மண்டலம் 17வது வார்டு திமுக இளைஞரணி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வட பெரும்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் கவுன்சிலர் கவிதா நாராயணன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி கிருமிநாசினி, சோப்பு ஆயில், மற்றும் கைத்துண்டு போன்றவைகளை இலவசமாக வழங்கினார். இதில், நிர்வாகிகள் அஜய்தென்னவன், முனிவேல் நாகராஜ், தென்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: