கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே அய்யனரி மேலகாலனியை சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன்(30) தொழிலாளி. இவர் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எஸ்.ஐ.முத்து விஜயன் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துகிருஷ்ணன், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.