திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே வயல்வெளியில் தூங்கிய வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் யுவான் ஜாக்விஸ். சைக்கிளில் பல்வேறு நாடுகளை சுற்றி வருகிறார். கடந்த ஜனவரியில் திருவனந்தபுரம் வந்தார். பல இடங்களையும் சைக்கிளில் சுற்றுப்பார்த்தார். பின்னர் இலங்கை சென்றார். இதையடுத்து சென்னை திரும்பியவர் மீண்டும் கேரளாவுக்கு வந்தார். கோவை வழியாக நேற்று முன்தினம் பாலக்காடு வந்தவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொடுவாயூர் பகுதியில் சென்றபோது மிகவும் களைப்படைந்தார். அப்போது வயல் பகுதியை பார்த்தவர் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். இதமான காற்று வீசியதால் வயலில் படுத்து தூங்கி விட்டார். இரவு முழுவதும் எழும்பவில்லை.