திருமலை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு மீட்டர் இடைவெளியில் பக்தர்கள் அமரவைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தங்கும் அறையில் காத்திருக்காமல் நேரம் ஒதுக்கீடு டிக்கெட் வழங்கி நேரடியாக தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறது. ஒரே நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் வரை அமர்ந்து சாப்பிடக்கூடிய அன்னதானம் வழங்கும் இடத்தில் தற்போது ஒரு மீட்டர் இடைவெளியில் 500 பக்தர்கள் வரை மட்டுமே அமர வைக்கப்பட்டு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா பீதி காரணமாக 1 மீட்டர் இடைவெளியில் அமரவைத்து பக்தர்களுக்கு அன்னதானம் விநியோகம்: திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை
- திருப்பதி தேவஸ்தனம் அதிரடி
- முடிசூட்டு பீதி நீக்கம்
- பக்தர்கள்
- இடைவெளி
- திருப்பதி தேவஸ்தானம்
- முடிசூட்டு பீதி மருந்தகம்