புதுடெல்லி: `‘குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அடிப்படை உரிமை எதுவும் மீறப்படவில்லை’’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தரப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை கடந்த ஆண்டு டிச.18ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், சிஏஏவை அமல்படுத்த தடையில்லை என்று கூறியது. மேலும் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.