திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று சத்துணவு தரவும் அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கன்வாடி பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று தமிழக முதல்வர், எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தார்.
கொரோனா அச்சம் எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
- பிரேத
- மாவட்ட ஆட்சியர் விடுமுறைக்கு உத்தரவிடுகிறார்
- மையங்கள்
- அங்கன்வாடி
- திருவாரூர் மாவட்டம்
- விடுமுறைக்கு
- மாவட்டம்
- மாவட்ட கலெக்டர்