சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முறையீடு செய்துள்ளனர். தலைமை நீதிபதியுடன் சென்னை பார் அசோசியேசன் தலைவர் விஜய நாராயணன், வழங்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் சந்தித்துள்ளனர். மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதில் அளித்துள்ளார்.