திருவள்ளூர்: மாவட்ட அளவிலான சிலம்பாட்டக் குழு போட்டியில், எண்ணூர் அணி முதலிடம் பிடித்தது.திருவள்ளூர் மாவட்ட நேரு யுவகேந்திரா, சிலம்பாட்டக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்டக் குழு போட்டி நடந்தது. சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட தலைவர் கமாண்டோ பாஸ்கர் முன்னிலையில், போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் தொடங்கி வைத்தார்.இந்தப் போட்டியில் தாலுகா வாரியாக அணிகள் பங்கேற்றன. அதில் எண்ணூர் அணி முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.