திருப்புவனம்: கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின் போது முதுமக்கள் தாழி மூடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி மற்றும் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ள்ளது. கொந்தகையில் நடந்து வரும் ஆய்வின்போது முதுமக்கள் தாழியின் மூடி கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் பல்வேறு வடிவங்களில் அதிகளவில் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழிகளின் அருகே அதன் மூடிகள் கிடைத்துள்ளன.