சென்னை: காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் நடிகையின் சிகை அலங்கார பெண் உதவியாளர் ஒருவர், பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை விருகம்பாக்கம் பாலாஜி நகரில் மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் மனைவி நடிகை மெளனிகா வீடு உள்ளது. இவர்கள் வீட்டில் கார் டிரைவராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வந்தார். அதபோல்,மெளனிகாவின் சிகை அலங்கார உதவியாளராக ஜோதிகா(22) என்ற பெண் வேலை செய்து வந்தார். டிரைவர் கார்த்திக் மற்றும் ஜோதிகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கார்த்திக் நடவடிக்கை சரியில்லாததால் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். பிறகு கார்த்திக் தனது காதலி ஜோதிகாவுடன் பேசுவதை படிப்படியாக நிறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.