கலவரம் மற்ற இடங்களுக்கும் பரவாமல் கட்டுப்படுத்துவது தான் டெல்லி போலீசின் முதல் பொறுப்பாக இருந்தது: மக்களவையில் அமித்ஷா பேச்சு

டெல்லி: மக்களவையில் டெல்லி வன்முறை தொடர்பான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து வருகிறார். டெல்லியில் நடந்த கலவரங்களில் உயிர் இழந்த அனைவருக்கும் எனது அஞ்சலி செலுத்துகிறேன், துக்கப்படுகின்ற அவர்களது குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 25-க்குப் பிறகு கலவரம் எதுவும் நடக்கவில்லை. இந்த கலவரங்களை அரசியலாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறை விசாரணை செய்து ஒரு அறிக்கையை வரும் நாட்களில் சமர்ப்பிப்பார்கள். கலவரம் மற்ற பகுதிகளுக்கு பரவ அனுமதிக்காததற்காக டெல்லி காவல்துறையை நான் பாராட்ட விரும்புகிறேன்.

Related Stories: