சென்னையில் வருகிற 14ம் தேதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் படம் திறப்பு

* மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

* அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னையில் வருகிற 14ம் தேதி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் படத்திறப்பு விழா நடக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தை திறந்து வைக்கிறார். இதில் பல்வேறு  அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி வருகிற 14ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகிக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேராசிரியரின் உருவப் படத்தை திறந்து வைக்கிறார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.

நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன்,

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்.குமார், இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து, தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மாவாசி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான்-கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர் க.முருகவேல்ராஜன், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: