புதுடெல்லி: சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் குறைவான எண்ணிக்கையில் தமிழகம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தஆண்டு நடந்த சாலை விபத்துகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2019ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1.49 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இந்தப் பட்டியலில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் உள்ளது. மொத்த உயிரிழப்புகளில் 15% உத்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்தவை. அதாவது கடந்த ஆண்டு அந்த மாநிலத்தில் மட்டும் 22,655 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ராஜஸ்தான், ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களில் அதிக இறப்புகளை கொண்ட மாநிலங்களாக உள்ளன. டெல்லி, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.