பாலக்காடு: கேரள-தமிழக எல்லையான வாளையார் அருகே தண்டவாளத்தை கடந்த காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 24 பன்றிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தன. கேரள-தமிழக எல்லை வாளையார் ரயில் நிலையம் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. யானைகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் அடிக்கடி தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது வழக்கம். இதையடுத்து வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. இருப்பினும் இரை, தண்ணீர் தேடி தண்டவாளத்தை கடக்கின்ற யானைகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.