புதுடெல்லி: எம்எல்ஏ, எம்பி.க்களுக்கு போல, தேர்தலின்போது அரசியல் கட்சிகள் செலவிடும் தொகையையும் நிர்ணயிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் செயற்குழு பரிந்துரைத்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலின்போது எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்ற வரையறை உள்ளது. அதேபோன்று, ஒரு கட்சி எத்தனை வேட்பாளர்களை நிறுத்துகிறதோ அதில் உச்சபட்ச செலவு வரம்பில் பாதியை மட்டுமே செலவிட வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.