சோபியான்: ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள கவ்ஜபோரா ரெபன் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான பகுதியை அடைந்தபோது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.