புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களிடம் நஷ்டஈடு கேட்டு, புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இழப்பீடு கேட்டு போட்டோவுடன், லக்னோ நகரின் முக்கிய சந்திப்புகளில் பேனர்கள் வைக்க உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதன்படி, தற்போது பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இழப்பீடு செலுத்த தவறினால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.