நவி மும்பை: மும்பையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் பல வெளிநாட்டு நாய்களை செல்லப் பிராணிகளாக தனது வீட்டில் வளர்த்து வருகிறார். அந்த நாய்களை மிக சொகுசாக வளர்க்க விரும்பிய அவர், தனது வீடு முழுவதும் ஏ.சி. வசதியை செய்தார். அந்த ஏ.சி. இயந்திரங்கள் 24 மணிநேரமும் குறிப்பிட்ட அளவு குளிரை கொடுக்கும் வகையில் அவர் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், ஏ.சி. இயந்திரங்கள் செயல்பட அந்த செல்வந்தர் திருட்டு மின்சாரத்தைத்தான் பயன்படுத்தி வந்தார். மின்சார வாரிய ஊழியர்களுக்கு தெரியாமல் நூதனமான முறையில் அவர் ஏ.சி. வசதிக்கு திருட்டு மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதுபற்றி அண்மையில் மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக கம்பெனி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.