கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கடைசி கிராமத்தில் வசிப்பவர் ராமன், விவசாயி. இவரது பசுமாட்டை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்காக வீட்டின் அருகில் விட்டுள்ளார். வழக்கமாக மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு வரும் பசுமாடு நேற்று முன்தினம் வராததால் நேற்று காலை அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது மாடு இறந்து கிடந்துள்ளது. மாட்டின் தொடைப் பகுதியை விலங்கு சாப்பிட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.