சிட்னி: மகளிர் டி20 உலக கோப்பை போட்டி அரையிறுதிப் போட்டிகளில் இந்தியா- இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்று விட்டன. ஆனால் பி பிரிவில் அரையிறுதிக்கு தகுதிப் பெற்ற இங்கிலாந்து 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளும், தென் ஆப்ரிக்கா 3 போட்டியில் விளையாடி 3லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளும் பெற்று சமநிலையில் இருந்தன.