டெல்லி: சீனாவின் மானசரோவர், நேபாளத்தின் முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 2019 ஏப்ரல் முதல் யாத்திரை சென்றோரும், மார்ச் 2020க்குள் செல்ல உள்ளோரும் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மானசரோவர், முக்திநாத், புனித யாத்திரை செல்வோருக்கு, மானியம் வழங்கும் திட்டத்தை, அறநிலைய துறை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2019 ஏப்ரல் 1 முதல் இம்மாதம் 31 வரை, மானசரோவர், முக்திநாத் யாத்திரை, புனித யாத்திரை மேற்கொண்டு முழுமையாக பயணம் முடித்து திரும்பியோருக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. புனித யாத்திரை முடித்த தமிழ்நாட்டை சேர்ந்த இந்து சமய யாத்ரீகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.