சென்னை: ஆய்வு பணிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் 13ம் தேதி சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் கடைகளில் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் குறிப்பிட்ட கடைகளை குறிவைத்து தொடர்ந்து ஆய்வு என்ற பெயரில் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். எனவே, இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க வேண்டும், தேவையில்லாத செலவினங்களான கடை வாடகை, மின் கட்டணம் போன்றவற்றை டாஸ்மாக் நிர்வாகமே ஏற்க வேண்டும், மதுக்கடைகளை கேரளாவில் உள்ளது போன்று திருத்தி அமைக்க வேண்டும்.