புதுடெல்லி: மூத்த தடகள பயிற்சியாளரும், துரோணாச்சார்யா விருது பெற்றவருமான ஜோகிந்தர் சிங் சைனி (90), இந்தியாவின் மிகச்சிறந்த டிராக் மற்றும் ஃபீல்ட் நட்சத்திரங்களை உருவாக்கிய சிறந்த பயிற்சியாளர். வயதுமூப்பு பிரச்னைகளால் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று பாட்டியாலாவில் காலமானார். 1970ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுகள் வரை தலைமை தேசிய தடகள பயிற்சியாளராக இருந்தார். ஜனவரி 1, 1930ல் பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தில் பிறந்த சைனி அறிவியல் பட்டதாரியாக இருந்து, 1954ல் தடகள பயிற்சியாளராக ஆனார்.