சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அரிட்டாப்பட்டியை சேர்ந்தவர் யோகேஸ்வரன். 2013- ஆம் ஆண்டைய ஆயுதப்படை காவலரான இவர் 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கோயம்புத்தூர் புதூரிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 4ம் அணியில் காவலராகப் பணியாற்றி வந்தவர். கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடமாறுதலாகி சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை முகாமில் இணைந்து பணியாற்றி வந்தார்.