மதுரை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டை முற்றுகையிட முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மகபூப்பாளையத்தில் 16வது நாளாக நேற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பழனிபாபா மாணவர் கூட்டமைப்பினர், மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை நேற்று முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனை தடுக்க அவரது வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை வீட்டில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு கிளம்பி சென்றார்.