மதுரை: திருநம்பியை திருமணம் செய்த இளம்பெண், பாதுகாப்பு கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம், செட்டிபாளையம் மாருதி நகரை சேர்ந்தவர் விஸ்வந்த் (22). திருநம்பி. கோவையில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (21). சமூக ஆர்வலர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். நீண்ட காலமாக காதலித்து வந்த இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு ெசய்தனர். இதற்கு பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் ஈரோடு மாகாளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர்.