சேலம்: சேலத்தில் உள்ள தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.94 லட்சம் மோசடி செய்திருப்பது தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் உட்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் 4 சாலை காமராஜர் காலனி பகுதியில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம் 22ம் தேதி நகைகள் ஏலம் விடப்பட்டன. அப்போது நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் மற்றும் நகையை அடமானம் வைத்த சிலர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிளை மேலாளர் தெய்வமணி தலைமை அலுவலகத்திற்கு சென்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கி வருகிறோம். இதில் வாடிக்கையாளர்கள் சிலர் போலி நகைகளை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளனர். இதற்கு எங்கள் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் உடந்தையாக இருந்துள்ளார்.