அரியலூர்: பள்ளி மாணவிகள் சிலர் மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள மாணவிகள் சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பகிர்ந்து குடிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. மதுகுடிக்கும் பழக்கம் பள்ளி மாணவிகளிடம் பரவி வருவது கலாச்சார சீரழிவு என்று வீடியோவை பார்த்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.