லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் விதவை பெண் ஒருவரை 4 ஆண்டுகளாக பாஜகவை எம்எல்ஏ மற்றும் அவரது 5 மகன்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்துள்ள பெண் வாரணாசி அடுத்துள்ள ஒரு குக் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். 35 வயதான இவர், தனது கணவரின் மரணத்திற்கு பிறகு தனியாக வசித்து வந்தார். தம்மை படோஹி தொகுதியில் பாஜக எம்எல்ஏ திரிபாதி மற்றும் அவரது 5 மகன்கள் கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளதாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.