டெல்லி : சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் நாளை வூகான் நகரத்திற்கு அனுப்பப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மோசமான பாதிப்பை எட்டி இருக்கும் சீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மருந்துகளை ஏற்றி செல்லும் விமானம் திரும்பி வரும் போது, அதில் இந்தியர்களை அழைத்து வர வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. வூகான் நகரத்தில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் அவர்கள் அங்குள்ள தூதரகத்தை அணுகும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.