புதுடெல்லி: இந்திய நிறுவனங்கள் பங்கேற்ற இயலாத வகையில் வெளியிடப்பட்ட ₹30,000 கோடி மதிப்பிலான டெண்டர்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.இந்தியாவில் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், உள்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் மேக் இன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்கள் உற்பத்தியை ெசய்து வருகின்றன. இந்நிலையில், இந்த திட்டத்தில் வந்த ₹30,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைப்பின் செயலாளர் குருபிரசாத் மகாபத்ரா கூறுகையில், ‘‘சில பாதகமான நடைமுறைகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஏறக்குறைய ₹30,000 கோடி மதிப்பிலான டெண்டர்களை ரத்து செய்துள்ளோம். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை லஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன.