போபால்: ‘‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், மத்தியப் பிரதேச முதல்வருக்கு எதிராக சாலையில் இறங்கி போராடுவேன்’’ என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா பேசியது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சிக்குள் அம்மாநில முதல்வரும், மாநில தலைவருமான கமல்நாத் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான இளம் தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது, சிந்தியாவிற்கு பிடிக்கவில்லை. தற்போது சிந்தியா, கமல்நாத் அரசை நேரடியாக விமர்சிக்க தொடங்கி உள்ளார். விரைவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.ம.பி. முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக சாலையில் இறங்கி போராடுவேன்: ஜோதிராதித்யா சிந்தியா பேச்சால் பரபரப்பு
- சாலை
- மத்தியப் பிரதேசம்
- கமல் நாத்
- ஜோதிராதித்ய
- கமல்நாத்: ஜோதிராதித்ய சிந்தியா
- சிந்தியா சாலையில் பேசுகிறார்