புதுடெல்லி: டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்க உள்ள அரவிந்த் ெகஜ்ரிவால், பிரதமர் மோடியை விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ராம லீலா மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கும் பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். இது, டெல்லிக்கான சிறப்பு விழா என்பதால் வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை.