புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டதாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் அங்கு சென்ற 15 பேர் கொண்ட வெளிநாட்டு தூதர்கள் குழு பார்வையிட்டது. இந்நிலையில், 2-வது கட்டமாக ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்கள் கடந்த 2 நாட்களாக காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த குழுவில் ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், நியூசிலாந்து, மெக்சிகோ, இத்தாலி, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, உஸ்பெகிஸ்தான், போலந்து உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் இடம்பெற்றிருந்தனர்.