மதுரை: மதுரை, தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்ததார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னர், விசாரித்ததில் புகாரில் முகாந்திரம் இல்லையென தெரிந்ததால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.