மும்பை : மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அலுவலக கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புறநகரான கிழக்கு அந்தேரியில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த வணிக கட்டிடத்தில் 2வது மாடியில் அமைந்துள்ள ரோல்டா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அலுவலகம் முற்றிலும் தீக்கறையானது. வானுயர கொழுந்துவிட்டு எரிந்த தீயால் கிழக்கு அந்தேரியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.