காட்பாடி : இந்தி மொழி தெரியாததால் இந்திய அணியில் இருந்து தம்மை வெளியேற்ற முயற்சி நடந்ததாக ஆசிய அளவிலான படகு தொடரில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரோஹித் மரடாப்பா தெரிவித்துள்ளார். காட்பாடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச கலை மற்றும் கலாச்சார திருவிழா நேற்று தொடங்கியது. இதில் அர்ஜுனன் விருது வென்ற வீரர் கணேசன், இந்திய படகு போட்டி வீரர் ரோஹித் மரடாப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.