அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 66 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அம்பத்தூர் பட்டரைவாக்கம் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயதில் மகள் உள்ளாள். சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 4ம் தேதி இரவு சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திரன் (66) என்பவர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து நைசாக பேசி வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். மேலும், ‘இதை யாரிடமும் சொல்லக்கூடாது’ என சிறுமியை மிரட்டி அனுப்பியுள்ளார்.