சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, ரயில் மறியலில் ஈடுபட்ட வழக்கில் வைகோ, திருமாவளவன் மீது சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 2016ம் ஆண்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் 500கும் மேற்பட்டோர், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலீசாரின் தடையை மீறி அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக கூறி எழும்பூர் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.