குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகின்றன. இந்நிலையில் உணவைத் தேடி சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதைக்கு, குட்டிகளுடன் 7 யானைகள் வந்து முகாமிட்டு உள்ளன. அவ்வப்போது காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சாலையை கடந்து செல்கிறது.