* தென் ஆப்ரிக்காவில் நடந்த ஐசிசி யு-19 உலக கோப்பை தொடரின் பைனலில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற வங்கதேச அணி வீரர்கள் தங்கள் அணியின் வெற்றியை ஆக்ரோஷமாகக் கொண்டாடியதுடன் இந்திய வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து ஐசிசி தீவிரமாக விசாரித்து வருவதாக இந்தியா யு-19 அணி மேலாளர் தெரிவித்துள்ளார். ‘இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ என்று வங்கதேச அணி கேப்டன் அக்பர் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.
* ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் 9720 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரபேல் நடால் (ஸ்பெயின், 9395 புள்ளி), ரோஜர் பெடரர் (சுவிஸ், 7130 புள்ளி) அடுத்த 2 இடங்களில் உள்ளனர்.