புதுடெல்லி: ‘வழக்கு தொடர்வதற்கு முன்பாக சமரசத் தீர்வு காண்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்றுவதற்கான காலம் கனிந்துள்ளது,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். டெல்லியில் ‘உலகமயமாக்கல் காலத்தில் சமரசம்’ என்ற தலைப்பில் நேற்று சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் அமைப்பு ரீதியான சமரசங்களை ஏற்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் ‘சமரச கவுன்சில்’ அமைக்கப்படுவது மிகவும் முக்கியம். சர்வதேச வர்த்தகத்தின் உலக கட்டமைப்பு, வர்த்தகம், முதலீடு ஆகியவற்றில் எழும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை காண்பதில் நடுவர் மன்றங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.