வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மீனவர் நலனுக்காக மீனவர் கடலில் மிதவை படகில் அமர்ந்து 5வது நாளாக தியானம் இருந்து வருகிறார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் சாகர் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, கோடியக்கரை படகுத்துறைக்கு தென் மேற்கே சுமார் 200 மீட்டர் தூர்த்தில் ஒரு மிதவை கடலில் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு வேதாரண்யம் கடலோரக் காவல்படை டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம், மற்றும் போலீசார் ஒரு படகில் அங்கு சென்றனர். அந்த மிதவை பிளாஸ்டிக் பேரல்களால் செய்யப்பட்டு, அதன் மேல், மூங்கில் மற்றும் தென்னங்கீற்றுகளால் கூரை போடப்பட்டு குடில்போல் அமைக்கப்பட்டிருந்தது.