அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் குனிய முடியவில்லை..காலில் குத்திய குச்சியை எடுக்கவே சிறுவனை உதவிக்கு அழைத்தார்: முதல்வர் பழனிசாமி பேட்டி

கோவை: ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவுக்கு தலைவாசலில் நாளை அடிக்கல் நாட்டவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது டி.என்.பி.எஸ்.சி. உரிய நடவடிக்கை எடுக்கும். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் குனிய முடியவில்லை எனவும் பழனிசாமி தெரிவித்தார். காலில் குத்திய குச்சியை எடுக்கவே சிறுவனை உதவிக்கு அழைத்தார் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: