புளோரிடா: அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 நாட்களாக நீடிக்கும் பனிப்புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோலினா, புளோரிடா மாகாணங்களில் கடந்த 4ம் தேதியில் இருந்து கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக வளாகங்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இருளில் தவித்து வருகின்றனர். பல்வேறு மாகாணங்களில் கனமழையும் கொட்டி வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.