இஸ்லாமாபாத்: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இவ்விவகாரத்தை எப்படியும் சர்வதேச பிரச்னையாக்கி இந்தியாவுக்கு நெருக்கடி தர தீவிரமாக முயற்சித்தது. ஐநா பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியும் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால், இஸ்லாமிய நாடுகளையாவது ஒன்றுதிரட்டி பிரச்னையை ஊதிப் பெரிதாக்க முயற்சித்தது.
இதற்காக, 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்டி, காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியது. இந்த அமைப்பில் எது நடக்க வேண்டுமென்றாலும் அதற்கு சவுதி அரேபியாவின் ஆதரவு வேண்டும்.