வேறொருவருடன் தொடர்பால் ஆத்திரம் தலையணையால் அழுத்தி கள்ளக்காதலி படுகொலை: போலீசுக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

சென்னை: வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதால் தலையணையால் முகத்தில் அமுக்கி கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு, ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இச்சம்பவம் பள்ளிக்கரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கரணை கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (46), ஆட்டோ டிரைவர். நேற்று காலை, இவருடைய வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது, சுரேஷ் தூக்கிட்டு சடலமாக தொங்கியதையும் அருகே ஒரு பெண் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது சடலங்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  சுரேஷ் ஏற்கனவே திருமணமானவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் கூடுவாஞ்சேரி, மோகன பிரியா நகரை சேர்ந்த ராணி (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராணியின் கணவர் கோவிந்தராஜ் ஏற்கனவே இறந்து விட்டார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக ராணியை வீட்டுக்கு அழைத்து வந்து சுரேஷ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே ராணிக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் சம்பவம் நடந்த அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையை வைத்து ராணியின் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார்.  பின்னர், போலீஸ் விசாரணைக்கு பயந்து சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

Related Stories: