சென்னை: வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதால் தலையணையால் முகத்தில் அமுக்கி கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு, ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பள்ளிக்கரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கரணை கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (46), ஆட்டோ டிரைவர். நேற்று காலை, இவருடைய வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது, சுரேஷ் தூக்கிட்டு சடலமாக தொங்கியதையும் அருகே ஒரு பெண் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது சடலங்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.