புதுச்சேரி: ‘‘கவர்னர் தொல்லையால் இரவில் தூக்கம் வருவதில்லை’’ என்று முதல்வர் நாராயணசாமி வேதனையுடன் கூறினார். புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் `நவீன கால கற்பித்தலின் பரிணாமம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தியல் கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: புதுவையில் 2016ம் ஆண்டில் புதிய தொழிற்கொள்கையை கொண்டுவந்தோம். அதுமட்டுமில்லாமல் பெட்ரோல், டீசல் வாகனங்களால் மாசு ஏற்படுவதை தடுக்க, மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களை இயக்குவதற்கு சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுத்தோம். தொழில் முனைவோர்களுக்காக புதிய ஸ்டார்ட் அப் கொள்கையும் வெளியிட்டோம். இதனால் 500 தொழிற்சாலைகள் சென்னையில் இருந்து வரவுள்ளது.